Thursday, September 20, 2012

[lyric] வாஞ்சை மிகுந்திட


Sax Pictures
சாருலதா
வாஞ்சை மிகுந்திட
இசை : சுந்தர் சி பாபு
இயக்கம் : பொன்குமரன்
குரல் : ரிடா
_______________________________



வாஞ்சை மிகுந்திட
ஆஞ்சை இடுகிறேன்
கொஞ்சம் பணிந்திடு - இனிவரும்
ஏல்வை முழுவதும் 
சால்வை இவளெனத் 
தோளில் அணிந்திடு

உனக்கென... உலகையே
உதறினேன் பார்த்திடு....
______

மாலை ரெண்டு மாற்றவில்லை
தாலி ஒன்றும் ஏற்றவில்லை
நீயும் நானும்  ஒன்றாய் வாழ்கின்றோம்

ஊரைப் பார்க்கத் தோன்றவில்லை
நாளை மீதும் நாட்டம் இல்லை
அன்றில் போலே ஒன்றாய் வாழ்கின்றோம்

ரேகைகள் ரெண்டில் ரெக்கைகள் நெய்தோம்
பறக்க வானேறினோம்
பூமியைச் சுற்றி முடித்ததாலே
புதிய கோள் தேடி நீயும் நானும் புகுந்திட...  (வாஞ்சை மிகுந்திட) 
______


பாதை எங்கே போகுமென்றே
சாலைப் பூக்கள் கேட்பதில்லை
பூக்கள் போலே வாழ்க்கை கொள்வோமா?

♂ 
பூவில் தோன்றும் வாசம் என்றும்
பாதை பார்த்துச் செல்வதில்லை
வாசம் போலே காற்றில் செல்வோமா?

உரிமை என்றே உடைமை என்றே
எனக்கு நீ தோன்றினாய்
இளமைக் காட்டின் செழுமை யாவும்
முழுமையாய் உந்தன் தலைமையில் திகழ்ந்திட... (வாஞ்சை மிகுந்திட)
______

2 comments:

Kaaviyam said...

Migavum arumai....paadal varigalin azhagai....varunikka....vaarthaigal thedi....ungal paadalil tholaindhen naan! :-)

Kaaviyam said...

migavum arumai....paadal varigalin azhagai....varunikka....vaarthaigal thedi....ungal paadalil tholaindhen naan! :-)