Thursday, September 20, 2012

[lyric] ஒன்றாக முளைத்தோம்


Sax Pictures
சாருலதா
ஒன்றாக முளைத்தோம்
இசை : சுந்தர் சி பாபு
இயக்கம் : பொன்குமரன்
குரல் : மஹதி 
_________________________________

ஒன்றாக முளைத்தோம்
ரெண்டாக சிரித்தோம் 
ஒற்றைக் காம்பில் ரெட்டைப் பூவானோம்
இணையே பிரியா - துளி 
தனிமை அறியா...
நம் போலே யாரும் இல்லை இவ்வுலகில்!


தாயன்பில் என்றும் பேதமில்லை
ஆளுக்கோர் தோள் தந்து தூங்கச்சொல்வாள்!
தாயைப் போல் தெய்வம் ஏதுமில்லை
ஆளுக்கோர் கண் கொண்டு காவல் நிற்பாள்!
பாடத்தில் காணாத வாழ்க்கையை
தாயே சொல்லித்தருவாள்!
ஊருக்குள் காணாத அன்பையும்
தாயே அள்ளித்தருவாள்!

நான் என்ற சொல்லே தேவையில்லை!
கண்ணாடி பார்த்திடும் வேலை இல்லை!
நாற்காலிப் பூக்கள் எங்களுக்கு 
நெஞ்சுக்குள் இரகசியம் வாய்ப்பேயில்லை!
தோளுக்குத் தோள் நின்று ஆடுவோம்
சோகம் அறிந்ததில்லை!
பாதைகள் ரெண்டாகும் போதிலும்
நாங்கள் பிரிந்ததில்லை!
______________________________________


No comments: