Friday, May 04, 2012

[lyric] கேளாமலே


Feather Touch Entertainment
தடையறத் தாக்க

கேளாமலே 
இசை : தமன்
இயக்கம் : மகிழ் திருமேனி 
குரல் : ஆலாப் ராஜு, ரீடா
____________________________



கேளாமலே கேளாமலே
பாய்கிறாய் எனக்குள்ளே!
நாளேழுமே நாளேழுமே
தோய்கிறாய் எனக்குள்ளே!


மேலும் கீழும் மேலும் கீழும்
அலைகளின் மடியிலே ...
மிதவையாய் நீ ஆகிறாய் 
வானம் ஏறி மேகம் கீறி
தூறல் தின்னும் பறவையாய்...
போகிறாய்....
_______________


> நீ கொட்டிச்சென்ற இன்பங்கள் அள்ளிட
> அண்டங்கள் போதாதென நான் கண்டேன்!
> நான் தேக்கி வைத்த தாகங்கள் சொல்லிட
> நேரங்கள் போதாதென நான் கண்டென்!
> யாரும் புகா ஆழத்தில் உன்னுள்ளே
> நீந்துதல் இன்பமென நான் கண்டேன்!


மேலும் கீழும் மேலும் கீழும்
அலைகளின் மடியிலே ...
மிதவையாய் நீ ஆகிறாய் 
வானம் ஏறி மேகம் கீறி
தூறல் தின்னும் பறவையாய்...
போகிறாய்....
_______________


> நான் நீங்கிச் செல்லும் நேரத்தில் நீயுன்னை
> உள்வாங்கிக் கொள்ளுகிறாய் நான் கண்டேன்!
> நான் சிந்திச்செல்லும் முத்தங்கள் வீழும்முன்
> நீ தாங்கிக் கொள்ளுகிறாய் நான் கண்டென்!
> ஆடைகளை மீறினாய் நெஞ்சுக்குள்
> ஈரமாய் மாறுகிறாய் நான் கண்டேன்!


மேலும் கீழும் மேலும் கீழும்
அலைகளின் மடியிலே ...
மிதவையாய் நீ ஆகிறாய் 
வானம் ஏறி மேகம் கீறி
தூறல் தின்னும் பறவையாய்...
போகிறாய்....
___________________

10 comments:

omvijay said...

GREAT & CLASSY

vijay

விஜய் said...

GREAT & CLASSY

விஜய் said...

GREAT & CLASSY

விஜய் said...

GREAT & CLASSY

saravanan207 said...

superb...

VJ Krish said...

இசையுடன் வரிகளை கேட்ட பின்பே இதன் சுவை புரியும்..

Unknown said...

இசையும் பாடல் வரிகளும் குழைந்து மிகவும் இனிமையான பாடலாக உருவெடுத்துள்ளது கேளாமலே !!

சேகர் said...

அருனமையான வரிகள்...

dream world said...

Indeed another beautiful creation..its a delight for a fan of yours sir....i loved this line "நான் தேக்கி வைத்த தாகங்கள் சொல்லிட
நேரங்கள் போதாதென நான் கண்டென்!"
I cherished kadhal sadugudu song lyrics by vairamuthu sir with your above line...."உன் உள்ளம் நான் காண என்னாயுள் பொதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் பொதாது"....long live your lyrics...its a bliss to read...

Tamilarasu said...

One of my Latest Favourite song,,,