Saturday, August 15, 2009

[song] ஓடோ ஓடோ : வரிகள்

பாடல் : ஓடோ ஓடோ
படம்: கண்டேன் காதலை   
தயாரிப்பு : Blue Ocean Entertainment
இயக்கம் : கண்ணன்
இசை : வித்யாசாகர்
_________________________________

ஓடோ ஓடோ ஓடோடிப்போறேன்

காதல் பாதி தேடோடிப்போறேன்


கனவெல்லாம் விரலோடு

உலகெல்லாம் அழகோடு

இனியெல்லாம் அவனோடு


பூவாகும் தாரோடு
காற்றாகும் காரோடு

மாற்றங்கள் வேரோடு


ஹோ ஹஹோ 

என் கூடு மாறப்போறேன்

ஹோ ஹஹோ

என் வானம் மாத்தப்போறேன்

______________________________


ஏய்

என் புதுச் சிறகே

நீ ஏன் முளைத்தாய்

கேட்காமல் என்னை


ஏய்

என் மனச் சிறையே

நீ ஏன் திறந்தாய்

கேட்காமல் என்னை


ஒற்றைப் பின்னல் அவனுக்காக

நெற்றிப் பொட்டும் அவனுக்காக

இன்னும் என்ன என்று என்னைக் கேட்காதே


இதழின் ஈரம் அவனுக்காக

மனதின் பாரம் அவனுக்காக

இன்னும் என்ன என்று என்னைக் கேட்காதே


ஹோ ஹஹோ 

என் கூடு மாறப்போறேன்

ஹோ ஹஹோ

என் வானம் மாத்தப்போறேன்


_________________________________________


ஏன்? 

நீ சிரிப்பது ஏன்?

நீ நடிப்பது ஏன்?

கேட்காதே என்னை


ஏன்?

நீ குதிப்பது ஏன்?

நீ மிதப்பது ஏன்?

கேட்காதே என்னை


தானே பேசி நடக்கும்போதும்

காற்றில் முத்தம் கொடுக்கும்போதும்

எனக்கென்ன ஆச்சு என்னைக் கேட்காதே...


கண்முன் சென்று நிற்கும்போதும்

கட்டிக்கொண்டு கத்தும்போதும்

எனக்கென்ன ஆச்சு என்னைக் கேட்காதே...


ஹோ ஹஹோ 

என் கூடு மாறப்போறேன்

ஹோ ஹஹோ

என் வானம் மாத்தப்போறேன்


___________________________________________



4 comments:

Unknown said...

Congratulations on your first song release. Finally got to hear it - it sounds pretty nice (though at few places the tune sounds familiar). All the best for your other upcoming songs.

By the way, I couldnt understand the lines
"பூவாகும் தாரோடு
காற்றாகும் காரோடு
மாற்றங்கள் வேரோடு "

Unknown said...

All the best upcoming lyricist.
I like your blog.Its cool ;-)

E.Arunmozhidevan said...

இந்த பாடலை கேட்டேன். மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்

Unknown said...

I hear this song. it was superb not only this kandaen kathalai's full song was super! congratulations!