Friday, July 20, 2012

[lyric] மாயாவி மாயாவி



UTV Entertainment
முகமூடி

பாடல் : மாயாவி மாயாவி
இசை : கே
இயக்கம் : மிஷ்கின்
குரல் : சின்மயி
_______________________________________


மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தேதான் திரிவான்
தலை தொடும் அலையென எழுந்திடுவான் - நெஞ்சில்
அணைத்திடும் மழையென நனைத்திடுவான்!

பயம் மூளும் நேரம் தரை வந்து காப்பான்
துயர் கொண்ட பேரை கரை கொண்டு சேர்ப்பான்
கடமை முடிந்தால் பறந்திடுவான் - பாவி
இவளின் துயரம் மறந்திடுவான்
அவனோடிவள் இதயம் தொலையும்! - தனிமைத் தெருவில்
இவளோடவன் நிழலும் அலையும்!

எழுநூறு கோடி முகம் இங்கு உண்டு
அழகான ஒன்றை எவர் கண்டதுண்டு?
மனதோர் உருவம் வரைகிறதே - காற்றில்
கனவாய் அதுவும் கரைகிறதே
கொடுமை அதில் கொடுமை எதுவோ? - விழிகள் இருந்தும்
உனை காணவே முடியாததுவோ?
_____________________________________

4 comments:

Desingh said...

மனதோடும் முகமூடி
அணிந்தேதான் திரிவான்

Superb

RAJIV GANDHI said...

அவனோடிவள் இதயம் தொலையும்! - தனிமைத் தெருவில்
இவளோடவன் நிழலும் அலையும்!

Yaathoramani.blogspot.com said...

எழுநூறு கோடி முகம் இங்கு உண்டு
அழகான ஒன்றை எவர் கண்டதுண்டு?
மனதோர் உருவம் வரைகிறதே - காற்றில்
கனவாய் அதுவும் கரைகிறதே
கொடுமை அதில் கொடுமை எதுவோ? - விழிகள் இருந்தும்
உனை காணவே முடியாததுவோ?//

ஜீபூம்பா பூதத்தை வார்த்தைக் குடுவைக்குள்
அடைத்து விட்டீர்களே
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Sathya003 said...

அழகான வரிகள் ..