Tuesday, January 31, 2012

[Lyric] தவறுகள் உணர்கிறோம்


Y Not Entertainment
காதலில் சொதப்புவதெப்படி
தவறுகள் உணர்கிறோம்
இசை : தமன்
இயக்கம் : பாலாஜி
குரல் : தமன்
_______________________________________________

கையை விட்டுக் கையை விட்டு நழுவி 
கீழ் விழுந்துக் கீழ் விழுந்து கிடக்கும் - நீ
கீரல்களைக் காயங்களை வருட - அது
மீண்டும் உந்தன் கையில் வரத் துடிக்கும் 

*

தவறுகள் உணர்கிறோம் 
உணர்ந்ததை மறைக்கிறோம்  
மமதைகள் இறந்திட
மறுபடி பிறந்திடுவோம்

*

ஒரே வலி...
இரு இதயத்தில் பிறக்குதே
ஒரே துளி...
இரு விழிகளில் சுரக்குதே
ஒரே மொழி...
நீ இழந்ததை அடைந்திட
அணைந்ததை எழுப்பிட
உலகத்தில் உண்டு இங்கே....

*
சுவர்களை எழுப்பினோம் நடுவிலே,
தாண்டிச் செல்லத் தானே இங்கு முயல்கிறோம்.
உறவுகள் உடைந்திடும் எளிதிலே,
மீண்டும் அதை கோர்க்கத்தானே முயல்கிறோம்.

*

சில உரசலில் பொறி வரும்
சில உரசலில் மழை வரும் 
நாம் உரசிய நொடிகளில் 
பரவிய வலிகளை 
மறந்திட மறுக்கிறோம் 
______________________________________________






2 comments:

Marc said...

சில உரசலில் பொறி வரும்
சில உரசலில் மழை வரும்
நாம் உரசிய நொடிகளில்
பரவிய வலிகளை
மறந்திட மறுக்கிறோம்


என்னையும் உரசிச் செல்கிறது.லேசாக கில்லிச் செல்கிறது.

அருமை அருமை

RAJIV GANDHI said...

ஒரே வலி...இரு இதயத்தில் பிறக்குதே
ஒரே துளி... இரு விழிகளில் சுரக்குதே
ஒரே மொழி... நீ இழந்ததை அடைந்திட
touching lines