Friday, December 23, 2011

[Lyric] காலமே காலமே!


Raindropss Media
World Disability Day
காலமே! காலமே!
இசை: தேவ் குரு
குரல்கள்: பிரியா ஹிமேஷ், பாலாஜி
இயக்கம்: அரவிந்த்
________________________________________

காலமே காலமே!
கால்களின்றி உன் போலே
நானும் ஓடுவேன்!
மேகமே மேகமே!
கைகளின்றி உன் போலே
வானம் தேடுவேன்!

தென்றல் வந்து பாடும் போது
ஆடும் பூவில் காது ஏது?
ஊர் மயங்க வாசம் வீசும்
பூமரத்தில் நாசி ஏது?

நாவின்றி பேசிடும்
வானவில் கண்டேன்!
விழியின்றி பார்த்திடும்
நெஞ்சினை கொண்டேன்!

தார்ச்சாலை தாண்டிச்செல்ல
கை நீட்டும் அன்பு போதும்!
நாற்காலி கேட்குமுன்னே 
தருவோரின் உள்ளம் போதும்!

இருள்கொண்ட எங்கள் ஊரில் 
விளக்கேற்றும் எண்ணம் போதும்!
எழுநூறு கோடி பேரில்
எமை காணும் கண்கள் போதும்!

கண்ணீரைத் துடைத்திடும்
விரல்களும் போதும்!
எமக்காக ஒலித்திடும்
குரல்களும் போதும்!


1 comment:

Kokilah Kanniappan said...

:-)
சில கவிதைகள்
விமர்சனங்களுக்கு(commments) அப்பாற்பட்டது!!