Friday, July 22, 2011

[lyrics] ஏஞ்சோ

படம் : வந்தான் வென்றான்

இசை : தமன்

இயக்கம் : கண்ணன்


மின் நிலவிவள் - ஒரு

வெண் ஒளித்திரள்

கண்கள் சிமிட்டிடும் - அந்த

நியுயார்க் சிலையிவள் - Yo!


ஏஞ்சோ - ஒரு பனித்துளிப் பதுமையோ?

ஏஞ்சோ - ஒரு புதுவகைப் புதுமையோ?


இவள் தும்பியோ ஒரு தும்பையோ?

ஜீன் டாப்ஸிலே ஒரு பெப்ஸியோ?

கேட்வாக்கிடும் ஒரு சேட்டையோ?

வாய்ப்பூட்டில்லா பூ மூட்டையோ?


ஹே வீணை மேலே பூனை போலே
பூமி மேலே வந்தாள் - ஹோ...

ஹே மௌனம் இல்லா நாணம் இல்லா
ஊனம் கொண்டே வந்தாள்


ஒரு வேளை திருவாயை.
திறவாமல். இருந்தாலே...

இவள் அமைதிக்கு நோபல் தர
உலகமே முடிவெடுக்கும்


ஹே ஏஞ்சோ

நீ விண்மீனின் பிஞ்சோ

ஹே ஏஞ்சோ...

நீ கொஞ்சும் மென் பஞ்சோ


----

இவள் விழிக் கூரில்

தினந்தினம்

கிழிபடும் நூறு

இருதயம்

ஆடை மோதி ஊரில் பாதி

அவதியில் அலைகிறதோ?


ஹே

நீடில் இடை மாடல் போலே

ஈடில்லாமால் வந்தாள் - ஹோ

ஐபாடில் இல்லா பாடல் ஒன்றை

காதில் பாட வந்தாள்!


நெப்ட்யூனே... என்றாலும்.

பண்டோரா சென்றாலும்

இவள் அழகுக்கு நிகர் என

அகிலத்தில் உயிர் இல்லையே!


-----

ஹீப்ரூ இலத்தீனக் கவிதைகள்

eyebrow மொழியோடு தோற்றிடும்


Ballet Flamenco நடனங்கள்

பாவை விழியோடு தோற்றிடும்


waltz 'n jazz எல்லாம்

இவள் பேச்சில் தோற்றிடும்


செங்காந்தள் ஆம்பல்

ஊதா ரோஜா நொச்சிப் பூவும்

இவள் மூச்சில் தோற்றிடும்


ஹோ ஏஞ்சல் ரேஞ்சில் ஏஞ்சோ.!

3 comments:

Indhu said...

மௌனம் இல்லா நாணம் இல்லா
ஊனம் கொண்டே வந்தாள்

Indhu said...

Wonderstruck . Your lyrics about love, the sweet nothing is raining everywhere and it is a non stop rain :).
Freshness, creation,applying innovation, words playing than unga motto va?.
Thanks

Jayanthy said...

I've listened to this song almost everyday and i don't really know how many times! I've enjoyed it thoroughly! :D
Thanks for yet another sizzling song Karky sir! :D