Showing posts with label Thaman. Show all posts
Showing posts with label Thaman. Show all posts

Friday, May 04, 2012

[lyric] கேளாமலே


Feather Touch Entertainment
தடையறத் தாக்க

கேளாமலே 
இசை : தமன்
இயக்கம் : மகிழ் திருமேனி 
குரல் : ஆலாப் ராஜு, ரீடா
____________________________



கேளாமலே கேளாமலே
பாய்கிறாய் எனக்குள்ளே!
நாளேழுமே நாளேழுமே
தோய்கிறாய் எனக்குள்ளே!


மேலும் கீழும் மேலும் கீழும்
அலைகளின் மடியிலே ...
மிதவையாய் நீ ஆகிறாய் 
வானம் ஏறி மேகம் கீறி
தூறல் தின்னும் பறவையாய்...
போகிறாய்....
_______________


> நீ கொட்டிச்சென்ற இன்பங்கள் அள்ளிட
> அண்டங்கள் போதாதென நான் கண்டேன்!
> நான் தேக்கி வைத்த தாகங்கள் சொல்லிட
> நேரங்கள் போதாதென நான் கண்டென்!
> யாரும் புகா ஆழத்தில் உன்னுள்ளே
> நீந்துதல் இன்பமென நான் கண்டேன்!


மேலும் கீழும் மேலும் கீழும்
அலைகளின் மடியிலே ...
மிதவையாய் நீ ஆகிறாய் 
வானம் ஏறி மேகம் கீறி
தூறல் தின்னும் பறவையாய்...
போகிறாய்....
_______________


> நான் நீங்கிச் செல்லும் நேரத்தில் நீயுன்னை
> உள்வாங்கிக் கொள்ளுகிறாய் நான் கண்டேன்!
> நான் சிந்திச்செல்லும் முத்தங்கள் வீழும்முன்
> நீ தாங்கிக் கொள்ளுகிறாய் நான் கண்டென்!
> ஆடைகளை மீறினாய் நெஞ்சுக்குள்
> ஈரமாய் மாறுகிறாய் நான் கண்டேன்!


மேலும் கீழும் மேலும் கீழும்
அலைகளின் மடியிலே ...
மிதவையாய் நீ ஆகிறாய் 
வானம் ஏறி மேகம் கீறி
தூறல் தின்னும் பறவையாய்...
போகிறாய்....
___________________

[lyric] காலங்கள்


Feather Touch Entertainment
தடையறத் தாக்க

காலங்கள் 
இசை : தமன்
இயக்கம் : மகிழ் திருமேனி 
குரல் : சின்மயி, ஜாவெத் அலி
____________________________



காலங்கள்... கண்முன்
பறந்தோடக் காணுகிறேன்
ஆனாலும்... உந்தன்
நெருக்கத்தில் நாணுகிறேன்


> நாளும் நாளும் உன் மேல்
> எந்தன் காதல் கூடினேன்
> நீளும் பாதை எங்கும்
> உந்தன் கைகள் நாடினேன்


எங்கும் பூவில் வீதியா?
நீ என் வாழ்வின் மீதியா?
_____________


நிலவுகள் நகர்ந்திட
நினைவுகள் வளர்ந்தன அன்பே!
கனவுகள் பகிர்ந்திட
விழிகளும் அறிந்தன அன்பே!


> விரிந்ததோ விரிந்ததோ
> ஆளுக்கொரு பூச்சிறகு
> யுகங்களைக் கடந்திட...


விரல் கோர்த்திடும் பயணங்கள்
எளிதினில் முடிவதில்லை


எங்கும் பூவில் வீதியா?
நீ என் வாழ்வின் மீதியா?
______________

Tuesday, January 31, 2012

[Lyric] அழைப்பாயா?


Y Not Entertainment
காதலில் சொதப்புவதெப்படி
அழைப்பாயா? அழைப்பாயா?
இசை : தமன்
இயக்கம் : பாலாஜி
குரல்கள் : கார்த்திக் & ஹரிணி 

_______________________________________________

விழுந்தேனா? தொலைந்தேனா?
நிறையாமல் வழிந்தேனா?
இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்,
சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்.
காலில்லா ஆமை போலவே
காலம் ஓடுதே!
இங்கே உன் இன்மையை உணர்கிற போது
ஒரே உண்மையை அறிகிறேன் நானே.
எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது
உன் நெஞ்சிலும் உண்டா என்றெண்ணியே
இருதயம் துடிக்குதே!

அழைப்பாயா? அழைப்பாயா?
நொடியேனும் அழைப்பாயா?
பிடிவாதம் பிடிக்கின்றேன் முடியாமலே...!
அழைப்பாயா?

அழைப்பாயா? அழைப்பாயா?
படிக்காமல் கிடக்கின்றேன்
கடிகாரம் கடிக்கின்றேன் விடியாமலே...! 
அழைப்பாயா?

*

நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லிப் பார்த்தேன்
நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லிப் பார்த்தேன்
நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன்
நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன்
நிலைமை தொடர்ந்தால்... என்ன நான் ஆகுவேன்?
மறக்கும் முன்னே
அழைத்தால்... பிழைப்பேன்...

அழைப்பாயா? அழைப்பாயா?
அலைபேசி அழைப்பாயா?
தலைகீழாய் குதிக்கின்றேன் குரல் கேட்கவே...!
அழைப்பாயா?

அழைப்பாயா? அழைப்பாயா?
நடுஜாமம் விழிக்கின்றேன்
நாட்காட்டி கிழிக்கின்றேன் உனைப் பார்க்கவே...!
அழைப்பாயா?

*

ஹே பாதி தின்று மூடிவைத்த தீனி போலவே
என் காதில் பட்டு ஓடிப் போன பாடல் போலவே
என் நாசி மீது வீசி விட்டு மாயமான வாசம் போலே
நீ பேசி வைக்கும் போது ஏக்கம் மூளும் நெஞ்சின் மேலே
சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே
இதயம் இங்கே  
வேறெதோ... நேருதே...

அழைப்பாயா? அழைப்பாயா?
தவறாமல் அழைப்பாயா?
தவறாக அழைத்தாலே அது போதுமே...! 
அழைப்பாயா?
அழைப்பாயா? அழைப்பாயா?
மொழியெல்லாம் கரைந்தாலும்
மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே!
அழைப்பாயா?



_______________________________________________

[Lyric] தவறுகள் உணர்கிறோம்


Y Not Entertainment
காதலில் சொதப்புவதெப்படி
தவறுகள் உணர்கிறோம்
இசை : தமன்
இயக்கம் : பாலாஜி
குரல் : தமன்
_______________________________________________

கையை விட்டுக் கையை விட்டு நழுவி 
கீழ் விழுந்துக் கீழ் விழுந்து கிடக்கும் - நீ
கீரல்களைக் காயங்களை வருட - அது
மீண்டும் உந்தன் கையில் வரத் துடிக்கும் 

*

தவறுகள் உணர்கிறோம் 
உணர்ந்ததை மறைக்கிறோம்  
மமதைகள் இறந்திட
மறுபடி பிறந்திடுவோம்

*

ஒரே வலி...
இரு இதயத்தில் பிறக்குதே
ஒரே துளி...
இரு விழிகளில் சுரக்குதே
ஒரே மொழி...
நீ இழந்ததை அடைந்திட
அணைந்ததை எழுப்பிட
உலகத்தில் உண்டு இங்கே....

*
சுவர்களை எழுப்பினோம் நடுவிலே,
தாண்டிச் செல்லத் தானே இங்கு முயல்கிறோம்.
உறவுகள் உடைந்திடும் எளிதிலே,
மீண்டும் அதை கோர்க்கத்தானே முயல்கிறோம்.

*

சில உரசலில் பொறி வரும்
சில உரசலில் மழை வரும் 
நாம் உரசிய நொடிகளில் 
பரவிய வலிகளை 
மறந்திட மறுக்கிறோம் 
______________________________________________






[lyric] பார்வதி பார்வதி


Y Not
காதலில் சொதப்புவது எப்படி
பார்வதி பார்வதி
இசை : தமன்
இயக்கம் : பாலாஜி
குரல் : சித்தார்த்
_______________________________________________

கல்லு மண்ணு காணும் முன்ன 
காதல் ஒண்ணு உண்டாச்சு
ஆணும் பொண்ணும் காதலிக்க
பூமி இங்கு ரெண்டாச்சு
பட்டு பட்டுக் கெட்டாலும் 
கிட்டத்தட்டச் செத்தாலும்
ஒட்டுமொத்தக் கூட்டமெல்லாம்
காதலித்து சொதப்புவோம்!
காதலித்து சொதப்புவோம்!

*

டேய்.. விடுங்கடா… 
classஉக்குப் போய்… படுங்கடா
என் கொடுமைய 
பொலம்பத்தான் விடுங்கடா
போனதே போனதே ஆயிரங்-கால்
ஃபோனில் எந்தன் பேரைக் கூட தூக்கிவிட்டாள்
கோடி சாரி சொல்லி போட்ட எஸ்ஸெமெஸ்ஸை
குப்பை லாரி ஏத்தி விட்டாள்
it’s over... it’s over…
எல்லாமே is over... 
status single மாற்றி விட்டாளே!

*

பார்வதி… பார்வதி…
பாதி ரூட்டில் தள்ளி விட்டாளே
பார்வதி… பார்வதி…
நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே
பார்வதி… பார்வதி… 
போதும் என்று சொல்லி விட்டாளே
பார்வதி… பார்வதி…
காதலுக்கு கொள்ளியிட்டாளே

*

டேய்.. கடவுளே… 
உனக்கென்ன குற வெச்சேன்?
என் கதையில
tragedy ஏன் வர வெச்ச?
ஊரெலாம் சுத்திட யாரிருக்கா?
பைக்கில் என்னை கட்டிக்கொள்ள யாரிருக்கா?
மூவி போக மூடு மாத்த யாரிருக்கா?
மோட்டிவேஷன் யாரிருக்கா?
it’s over… it’s over
எல்லாமே is over
என்று சொல்லி ஓடி விட்டாளே

*

பார்வதி… பார்வதி...
கும்பலோடு சுத்த விட்டாளே
பார்வதி… பார்வதி…
முத்தவிட்டு கத்த விட்டாளே
பார்வதி… பார்வதி…
சங்கு ஊதி மூடி விட்டாளே
பார்வதி… பார்வதி…
சிங்கிள் சிங்கம் ஆக்கி விட்டாளே

_______________________________________________