Showing posts with label karky. Show all posts
Showing posts with label karky. Show all posts

Wednesday, November 07, 2012

[lyric] எனை எனை தீண்டும்



Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
எனை எனை தீ ண்டும் 
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : ஹரிசரண், மஹதி 
________________________________________


எனை எனை தீண்டும் 
தனிமையும் நீயா?
அருகிலே கேட்கும் 
அமைதியும் நீயா?

விழிகளை நான் மூட
கனவிலே நீயா?
திறந்ததும் நீ இல்லா
வெறுமையும் நீயா?

ஏன் எனை என் மனம் கேட்காதது ஏன்?
தருக்கங்களை பார்க்காதது ஏன்?
உருக்கும் ஒரு காதல் உணர்ந்தேன்!

#


அருகினில் குதிக்கிற அருவியிலே - தலை
குளித்ததும் உலர்த்திடும் சிறகினிலே 
சிலிர்த்திடும் சருகுகள் மொழியினில் கேட்பவன் நீ

திரிமுனை எரிந்திடும் அழகினிலே - அதில் 
முதல் முறை நெகிழ்ந்திடும் மெழுகினிலே
விழுந்திடும் இளகிய அழுகையில் காண்பவன் நீ


என் மார்பில் மோதும் - ஒரு
மென் மேகம் ஆனாய்
கண் மூடி நின்றேன் - நீ 
எங்கோடிப் போனாய்?


ஏன் எனை என் மனம் கேட்காதது ஏன்?
தருக்கங்களை பார்க்காதது ஏன்?
உருக்கும் ஒரு காதல் உணர்ந்தேன்!

#


ஓடையின் தெள்ளிய நீர்த்துளி நீ - ஒரு 
பூவினின்றள்ளிய தேன் துளி நீ
நாவினில் தமிழென நாளும் 
இனிப்பவன் நீ

இமைகளில் மியிலிறகானவன் நீ - என்
இதழினில் விழுகின்ற பனித்துளி நீ
இதயத்தை வருடிடும் உணர்வுகள் 
யாவிலும் நீ


என் தேகம் பாயும் - ஒரு 
உற்சாகம் நீயா?
சந்தேகம் இன்றி - என்
கண்ணீரும் நீயா?


ஏன் எனை என் மனம் கேட்காதது ஏன்?
தருக்கங்களை பார்க்காதது ஏன்?
உருக்கும் ஒரு காதல் உணர்ந்தேன்!




_________________________________________


[lyric] விட்டு விட்டுத் தூவும்


Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
விட்டு விட்டு
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : ராகுல் நம்பியார், பார்கவி 
_________________________________________



விட்டு விட்டுத் தூவும்
வெட்கங்கெட்ட வானம்
கிட்டத் தட்ட என் நெஞ்சமோ?

முட்ட வந்த பூவின்
முட்கள் குத்தும் என்றே
வட்டமிட்ட வண்டஞ்சுமோ?


சொல்லாமல் மோதும் 
சில்லென்ற காற்றைப் போல நீயும் வந்தாய்
நில் என்ற போதும்
நில்லாமல் ஆடைக்குள்ளே நீ புகுந்தாய்

கல்லொன்று வீசி 
உள்ளத்தின் ஆழம் என்ன தேடுகின்றாய் 
தெள்ளோடை என்னை
உள்ளங்கையோடு அள்ளி ஓடுகின்றாய்


♂  
மொத்த மொத்த நெஞ்சை 
சத்தமிட்டுச் சொன்னால்
செத்து கித்துப் போவேனடி 

குத்தும் என்று இல்லை
தித்திக்கின்ற தேனில் 
புத்தி கெட்டுப் போவேனடி


நில்லாமல் பேசும் 
நீரோடை போலே என்னுள் பாய்கின்றாய்
புல்லோடு வீழும்
பூவாகி எந்தன் தோளில் சாய்கின்றாய்


பொல்லாத போதை 
என்றாகி என்னுள் ஏறி ஆடுகின்றாய்
செல்லாத பாதை
ஒன்றோடு என்னைக் கூட்டி ஓடுகின்றாய்
________________________________________




[lyric] மேகத்திலே மேலாடை


Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
மேகத்திலே மேலாடை
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : ஷ்ரேயா கோஷல்
___________________________________


மேகத்திலே மேலாடை
காலை நிலா, காலாடை
ஊலலலா உள்ளந்தான்
நானணியும் உள்ளாடை

புல் மீது தூங்குவேன்
அதுவே என் மாளிகை
செல் என்ற பின்புதான்
நகரும் என் நாழிகை 

என் பூமி பூமி அது வேறு
என் விழியால் அதை நீ பாரு
பூமி பூமி அது வேறு
என் விழியால் அதை நீ பாரு


பூ ஒன்று திறக்கும் போது
இமைதட்டிச் சிரிப்பேனே
ஈ மீது பூ உதிர்ந்தாலோ
இரண்டுக்கும் அழுவேனே

தேய்பிறை அதன் சோகம் கண்டால்
தேவதை அதில் ஊஞ்சல் செய்வேன்
தேவைகள் ஏதும் இல்லை என்றால்
தெய்வமே இனி நான் தானே

யாரும் இல்லாத போதில்
சத்தமில்லாமல் காதில்
எந்தன் பேர் சொல்லி காற்றும் வீசும்

பூமி பூமி இது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு
பூமி பூமி அது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு


வானோடு மழை வரக் கூடும்
மின்னல் போடும் மின்னஞ்சல்
புயல் ஒன்றின் தொலைநகலாகும்
இன்று வீசும் மென் தென்றல்

தூறலே குறுஞ்செய்தி ஆகும்
வானவில் பின்னணியில் தோன்றும்
அழைக்கிறாய் ஒரு இரகசியம் சொல்ல
அருவிகள் அழைப்பொலியாகும்

பேச காசேதும் இல்லை
ஊரும் ஏன் பேச வில்லை
ஊடகம் எங்கும் விளம்பரம் உனக்கில்லை


பூமி பூமி இது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு
பூமி பூமி அது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு
_____________________________________




Thursday, October 11, 2012

[lyric] Antarctica

Creations
துப்பாக்கி
Antarctica
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : AR முருகதாஸ்
குரல் : விஜய் பிரகாஷ், க்ரிஷ்
_________________________________

அண்டார்டிக்கா
வெண் பனியிலே 
ஏன் சறுக்குது நெஞ்சம்?

நீ பெங்குவினா?
பெண் டால்ஃபினா?
ஏன் குழம்புது கொஞ்சம்?

ஹே நிஷா..... நிஷா நிஷா
ஹே நிஷா.... நிஷா நிஷா

அடி பெண்ணே என் 
மனது எங்கே
ரேடார் விளக்குமா?


அடி என் காதல் 
ஆழம் என்ன?
சோனார் அளக்குமா?
_______


அழகளந்திடும் கருவிகள்
செயலிழந்திடும் அவளிடம்
அணியிலக்கணம் அசைவதை பார்த்தேன்!

அவள் புருவத்துக் குவியலில்
மலைச் சரிவுகள் தோற்பதால்
விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்!

அவள் மேலே வெயில் வீழ்ந்தால்
நிலவொளியாய் மாறிப் போகும்
அவள் அசைந்தால்,
அந்த அசைவிலும் இசை பிறக்கும்!
_______

தடதடவென ராணுவம்
புகுந்திடும் ஒரு சாலையாய்
அதிர்வுடன் நுழைந்தாயடி, என்னில்! 

இருவிழிகளின் குழலிலே
படபடவென வெடிக்கிறாய்
இருதயம் துளைத்தாயடி, கண்ணில்!

உனைப் போலே ஒரு பெண்ணை
காண்பேனா என்றே வாழ்ந்தேன்
நீ கிடைத்தால்,
என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்!
_______________________________________

[lyric] Google Google

V Creations
துப்பாக்கி
Google Google
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : AR முருகதாஸ்
குரல் : விஜய், ஆண்ட்ரியா
_______________________________

Google Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல - 
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல
Yahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவனப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல
நான் dating கேட்டா watch பாத்து ok சொன்னானே!
shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே!
movie கேட்டேன் Youtube போட்டுப் popcorn தந்தானே!
பாவமா நிக்குறான்
ஊரையே விக்குறான்!
Meet my meet my boyfriend
My smart ‘nd sexy boyfriend
Meet my meet my boyfriend
My smart ‘nd sexy boyfriend

♂ 
Google Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல - 
இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல
Yahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவளப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல
இவ dating-காக dinner போனா starter நான் தானே!
shopping போக கூட்டிப் போனா trolley நான் தானே!
movie போனா சோக sceneஇல் kerchief நான் தானே!
பாக்கதான் இப்படி
ஆளுதான் அப்படி!
Meet my meet my girlfriend
My hot ‘n spicy girlfriend
Meet my meet my girlfriend
My hot ‘n spicy girlfriend
______


ஹே join me guys 
It’s intro time
இவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க

பஞ்சுன்னு நெனச்சா
punch ஒண்ணு கொடுப்பா
மூஞ்சுல helmet மாட்டிக்க

sugar free பேச்சுல இனிப்பிருக்கு - இவ
fat free உடம்புல கொழுப்பிருக்கு

சிரிப்புல cinderella
கோபத்தில் dracula
அழகுக்கு இவதான் formula formula


Meet my meet my girlfriend
My hot ‘n spicy girlfriend



hey come on girls
இது intro time
இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா?

ஒரு handshake  செஞ்சிட
பொண்ணுங்க வந்தா
ஸ்வொய்ங்குன்னு பறப்பான் bulletஆ

military cutல style இருக்கும் - ஒரு
மில்லிமீட்டர் sizeல சிரிப்பிருக்கும் 
almost ஆறடி
ஊரில் யாரடி
இவன் போல் இவன் போல்
goody goody goody goody


Meet my meet my boyfriend
My smart ‘nd sexy boyfriend
_____



என் facebook friends யார் யாருன்னு
கேட்டுக் கொல்ல மாட்டானே
என் status மாத்தச் சொல்லி என்ன
தொல்லை செய்ய மாட்டானே

கிட்ட வந்து நான் பேசும் போதோ
twitterகுள்ள மூழ்கிடுவான்
இச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்தா
நச்சுன்னு ட்வீட்டா போட்டுடுவான்

romance கொஞ்சம்
thriller கொஞ்சம்
காத்தில் பஞ்சாய் நெஞ்சம் நெஞ்சம்

Meet my meet my boyfriend
My smart ‘nd sexy boyfriend



அவ cell phone ரெண்டிலும் காலிருக்கும்
backup boyfriends நாலிருக்கும்
நெஞ்சுல jealousyய வெதச்சுடுவா - என்
வயித்துக்கு gelusil கொடுத்திடுவா

பொண்ணுங்க நம்பர் என் phoneல பாத்தா
சத்தமில்லாம தூக்கிடுவா - 
ஓரக் கண்ணால sight அடிச்சாலும்
நோக்குவர்மத்தில் தாக்கிடுவா

அளவா குடிப்பா
அழகா வெடிப்பா
இதயத் துடிப்பா(க) துடிப்பா(ள்) துடிப்பா(ள்)

Meet my meet my girlfriend
My hot ‘n spicy girlfriend
________________________________

Thursday, September 20, 2012

[lyric] வாஞ்சை மிகுந்திட


Sax Pictures
சாருலதா
வாஞ்சை மிகுந்திட
இசை : சுந்தர் சி பாபு
இயக்கம் : பொன்குமரன்
குரல் : ரிடா
_______________________________



வாஞ்சை மிகுந்திட
ஆஞ்சை இடுகிறேன்
கொஞ்சம் பணிந்திடு - இனிவரும்
ஏல்வை முழுவதும் 
சால்வை இவளெனத் 
தோளில் அணிந்திடு

உனக்கென... உலகையே
உதறினேன் பார்த்திடு....
______

மாலை ரெண்டு மாற்றவில்லை
தாலி ஒன்றும் ஏற்றவில்லை
நீயும் நானும்  ஒன்றாய் வாழ்கின்றோம்

ஊரைப் பார்க்கத் தோன்றவில்லை
நாளை மீதும் நாட்டம் இல்லை
அன்றில் போலே ஒன்றாய் வாழ்கின்றோம்

ரேகைகள் ரெண்டில் ரெக்கைகள் நெய்தோம்
பறக்க வானேறினோம்
பூமியைச் சுற்றி முடித்ததாலே
புதிய கோள் தேடி நீயும் நானும் புகுந்திட...  (வாஞ்சை மிகுந்திட) 
______


பாதை எங்கே போகுமென்றே
சாலைப் பூக்கள் கேட்பதில்லை
பூக்கள் போலே வாழ்க்கை கொள்வோமா?

♂ 
பூவில் தோன்றும் வாசம் என்றும்
பாதை பார்த்துச் செல்வதில்லை
வாசம் போலே காற்றில் செல்வோமா?

உரிமை என்றே உடைமை என்றே
எனக்கு நீ தோன்றினாய்
இளமைக் காட்டின் செழுமை யாவும்
முழுமையாய் உந்தன் தலைமையில் திகழ்ந்திட... (வாஞ்சை மிகுந்திட)
______

[lyric] கடவுள் துகள்


Sax Pictures
சாருலதா
கடவுள் துகள்
இசை : சுந்தர் சி பாபு
இயக்கம் : பொன்குமரன்
குரல் : சுச்சித் சுரேசன்
_________________________________


எடையில்லா கடவுள் துகளைப் போலே
மிதக்கின்றேன் வெள்ளை வண்ண வானத்திலே
தடையில்லா வழியில் பாயும் காற்றாய்
மனதுள்ளே கொள்ளை இன்பம் பாய்கிறதே 
இனியேதும் அச்சங்கள் இல்லை
இனியேதும் துன்பங்கள் இங்கில்லை
முடிவில்லா காதல் மட்டும் தான்.... 
_____


புன்னகைகள் நான் தேடுகிறேன்
உள்ளுக்குள்ளே அவை வைத்துக்கொண்டே
சொர்கங்களை நான் தேடுகிறேன் 
என்னருகே உன்னை வைத்துக்கொண்டே

ஒட்டிக்கொண்டே பிறந்திடும் இரு பிள்ளைகளாய்
இன்பத்துடன் துன்பம் பிறக்கும்!
காதல் கொண்டே
இந்த காலம் என்ற கத்தியால்
துன்பத்தை வெட்டி எறிந்தோம்!
_____


தெய்வங்களை நான் நம்புவதே
கண்ணில் உன்னை காணச் செய்ததற்கே
வேதியலை நான் நம்புவதே
உன்னை என்னை ஒன்று சேர்த்ததற்கே

முத்தந்தின்னி பறவை ஒன்றின்று என்னைச் சுற்றி
கொத்துதிங்கே என்ன செய்வேனோ?
வெட்கத்தினை
கேட்டு நச்சரித்து நிற்குதே
யாரோடு நியாயம் கேட்பேனோ?
_____

Thursday, August 09, 2012

[lyric] கால் முளைத்த பூவே!


AGS Entertainment
மாற்றான்
பாடல் : கால் முளைத்த பூவே!
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : கே வி ஆனந்த்
குரல்கள் : ஜாவேத் அலி, மஹாலக்ஷ்மி ஐயர்
_________________________________________

♂ 
கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா!
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா!

கேமமில் பூவின் வாசம் அதை - உன்
இதழ்களில் கண்டேனே!
சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்
விழிகளின் விளிம்பினில் கண்டேன்!

அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.
______________

♂ 
நிலவுகள் தலைகள் குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே!

தலைகள் குனிந்ததோ?
மமதை அழிந்ததோ?
கடமை முடிந்ததோ?
பிறந்த நொடியிலே!

ஹே பெண்ணே...உன் வளைவுகளில்
தொலைவதுபோலே உணருகிறேன்
இடையினிலே திணறுகிறேன்
கனவிதுதானா… வினவுகிறேன்.

அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.
______________

இரவெலாம் நிலவு எரிகையில்
திரிகளாய் விரல்கள் திரியுதே!
அருகிலே நெருங்கி வருகையில்
இளகியே ஒழுக்கம் உருகுதே!


நிலவு எரிகையில்
விரல்கள் திரியுதோ?
நெருங்கி வருகையில்
ஒழுக்கம் உருகுதோ?


எனை ஏனோ... உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
இடைவெளியை சுருக்குகிறாய்
இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்!


அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் ம்ம்
இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் ம்ம்
உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்
எரியும் வெறியை தெறித்தாய்.
______________

Friday, July 20, 2012

[lyric] வாய மூடி



UTV Entertainment
முகமூடி

பாடல் : வாய மூடி
இசை : கே
இயக்கம் : மிஷ்கின்
குரல் : ஆலாப் ராஜு

_____________________________________

வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!

#### நேற்று

கடிகாரம் தலைகீழாய் ஓடும்  - இவன்
வரலாறு எதுவென்று தேடும்!
அடிவானில் பணியாது போகும் - இவன்
கடிவாளம் அணியாத மேகம்!

பல நிலவொளிகளில்
தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில்
கனவுகள் இல்லை ஏதும்.

காணாமலே
போனானடா!
ஏனென்று கேட்காதே போடா !

#### இன்று

பார்வை ஒன்றில் காதல் கொண்டா,
எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்?
பேரே இல்லா பூவைக் கண்டா,
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்?

என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ?

நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ?

ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில்
ஏனிந்தக் காதல்?

#### நாளை

நாளை என் காலைக்
கீற்றே நீ தானே!
கையில் தேநீரும் நீ தானடி!

வாசல் பூவோடு
பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீ தானடி!

கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?

கண் மூடிடும்
அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!

[lyric] மாயாவி மாயாவி



UTV Entertainment
முகமூடி

பாடல் : மாயாவி மாயாவி
இசை : கே
இயக்கம் : மிஷ்கின்
குரல் : சின்மயி
_______________________________________


மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தேதான் திரிவான்
தலை தொடும் அலையென எழுந்திடுவான் - நெஞ்சில்
அணைத்திடும் மழையென நனைத்திடுவான்!

பயம் மூளும் நேரம் தரை வந்து காப்பான்
துயர் கொண்ட பேரை கரை கொண்டு சேர்ப்பான்
கடமை முடிந்தால் பறந்திடுவான் - பாவி
இவளின் துயரம் மறந்திடுவான்
அவனோடிவள் இதயம் தொலையும்! - தனிமைத் தெருவில்
இவளோடவன் நிழலும் அலையும்!

எழுநூறு கோடி முகம் இங்கு உண்டு
அழகான ஒன்றை எவர் கண்டதுண்டு?
மனதோர் உருவம் வரைகிறதே - காற்றில்
கனவாய் அதுவும் கரைகிறதே
கொடுமை அதில் கொடுமை எதுவோ? - விழிகள் இருந்தும்
உனை காணவே முடியாததுவோ?
_____________________________________

Thursday, June 07, 2012

[lyric] நீ இன்றி


AG Creations
பொன் மாலைப் பொழுது
பாடல் : நீ இன்றி [அந்தாதி]
இசை : சத்யா
இயக்கம் : துரை
குரல் : சத்யா
_______________________

நீ இன்றிக் கிடக்கும் இருக்கை அருகே
நெஞ்சம் ஏனோ தவழுது?

தவளைக் கிணறாய் சுருங்கும் உலகம்
கொஞ்சம் மெதுவாய் சுழலுது

சுழலின் உள்ளே உறங்கும் மீனாய்
வகுப்பில் நானும் இருக்கிறேன்

இறுக்கிப் பிடிக்கும் உனது நினைவில்
உறக்கம் கலைந்தேன். நீ எங்கே?

எங்கே எங்கே எங்கே? 
ஓஹொ... ஓ...

ஓர் ஆண்டிலே நேராதது
விலகித் தவிக்கையில் நிகழ்வது ஏன்?

ஏனோ உனைக் காண்பேனென
இதயம் துடிக்கையில் உணருகிறேன்

உனது சுவடுகள் தொடருகிறேன்
தொடங்கும் இடத்தினில் சேருகிறேனே
சேரும் வரை கண்ணில் தூக்கம் தோன்றாது
தோன்றும் வலி நீ வரும் வரையினில் நீங்காது

_______________________


[lyric] வாற்கோதுமைக் கள்


AG Creations
பொன் மாலைப் பொழுது
பாடல் : வாற்கோதுமைக் கள் 
இசை : சத்யா
இயக்கம் : துரை

__________________

வாற்கோதுமைக் கள்ளோடு
வா தோழனே என்னோடு
ஊர்விட்டோடி காற்றை சுவாசிக்கலாம்

நாற்காலிகள் மேசைகள் 
நாள்தோறுமே தேய்த்தோமே
மேற்கூரையாய் வானம் நேசிக்கலாம்

கோப்புகளோடு கொட்டிய குப்பை
கோப்பைகள் முட்டி மறந்திடுவோம்!
பகலிரவைந்தும் நிகழ்த்திய தப்பை
ஓரிரு நாட்கள் துறந்திடுவோம்!

தோள்கள் உரசிப் பேசிக் கிடக்க
வாரக் கடைசி வந்ததடா!
செல்லிடப்பேசி மூடி அணைக்க
வாரக் கடைசி வந்ததடா!

வாற்கோதுமைக் கள்
சோர்வோயவே கொள்
_____________________

விரிவுரை எல்லாம் வரிவரியாக
எழுதி விரலும் தேய்ந்ததே
அறிவுரை கேட்டு சரிசரிசொல்லி
வறண்டு குரலும் காய்ந்ததே

தேயும் நிலவென 
புன்னகையும் சுருங்கி
யானை மிதிபடும்
அப்பளமாய் நொறுங்கி

ஞானம் பிறக்க ஞாலம் சிறக்க
வாரக் கடைசி வந்ததடா
மேற்கில் பறக்க ரெக்கை விரிக்க
வாரக் கடைசி வந்ததடா
_______________________

சங்கை ஊதித்  திங்கள் வந்தது
ஜவ்வாய் மாறிச் செவ்வாய் வந்தது
பூதம் போலொரு புதனும் வந்திடும் செல்லும்
வியாதித் தீயென வியாழன் வந்ததும் கொல்லும்
கவலைக்கிடமாய் நிலமை நிலமை 
தொடரும் தொடரும் தொடரும் தொடருமே

வெள்ளிக்கிழமை வந்தால் ஏனோ
உள்ளம் உச்சம் துள்ளுதோ?
யார் கையிலே யார் பையிலே 
இன்னும் மிச்சம் உள்ளதோ… 
... வாற்கோதுமைக் கள்ளோடு
வா தோழனே என்னோடு
ஊர்விட்டோடி காற்றை சுவாசிக்கலாம்
_________________________

புத்தகம் எல்லாம்
மூளை திணித்தே
மந்தையில் ஆடாகினோம்

ஆந்தைகள் போலே
கண்கள் விழித்தே
மண்டையில் சூடாகினோம்

நுரையீரல் எல்லாம்
வகுப்பறை வாசம்
அதை நீக்கத் தானே வழி தேடினோம்

நுனிநாக்கும் தானாய்
ஆங்கிலம் பேசும்
அதைப் போக்கத் தானே தமிழ் பாடினோம்

நிலவோடு கரைகள் குறையில்லை என்றே
அளவோடு ஏதும் பிழையில்லை என்றே... 
... வாற்கோதுமைக் கள்ளோடு
வா தோழனே என்னோடு
ஊர்விட்டோடி காற்றை சுவாசிக்கலாம்
___________________________