Showing posts with label mudivillaa mazhaiyoadu. Show all posts
Showing posts with label mudivillaa mazhaiyoadu. Show all posts

Friday, July 22, 2011

[lyrics] முடிவில்லா மழையோடு

படம் : வந்தான் வென்றான்

இசை : தமன்

இயக்கம் : கண்ணன்


முடிவில்லா மழையோடு

விளையாடும் எங்கள் கூட்டம்

அடிவானின் நிறமெல்லாம்

விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்

விடிகாலை பனியோடு நம்

புன்னகையின் மூட்டம்

அடிநெஞ்சில் உற்சாகம்

கற்பூரம் போலே பற்றட்டும்


சீறிப் பாயும் வெள்ளம் என

உள்ளம் துள்ளி ஆடட்டும்!

காட்டுத் தீயின் பந்தாய் - என்

கால்கள் இங்கே ஓடட்டும்!


அடி வைத்தால் அதிரட்டும்

வான் மீன்கள் உதிரட்டும்

போராடும் மட்டும்

ஏதும் எட்டும்

மேகம் முட்டிக் கொட்டட்டும்!


-----

உன் பாதம் கொஞ்சம் தேயாமல்

உன் வாழ்க்கை என்றும் மாறாது!

கண் ஈரம் கொஞ்சம் காயாமல்

உன் காயம் ஒன்றும் ஆறாது!


தோல்விகள் ஆயிரம் எல்லாம்

தோரணம் கோர்த்திடு தோழா!

வெற்றியின் வாசலைச் சேர

காரணம் பார்த்திடு தோழா!


----

நம் பாதை செல்லும் நீளந்தான்

நம் புன்னகையின் நீளங்கள்

நாம் ஏறி வரும் ஆழந்தான்

நம் இன்பங்களின் ஆழங்கள்


சேற்றிலே நீ விழுந்தாலும்

தாமரை மாலைகள் மாட்டிடு

நேற்று நீ போர் இழந்தாலும்

நாளை உன் நாளெனக் காட்டிடு