Friday, July 20, 2012

[lyric] வாய மூடி



UTV Entertainment
முகமூடி

பாடல் : வாய மூடி
இசை : கே
இயக்கம் : மிஷ்கின்
குரல் : ஆலாப் ராஜு

_____________________________________

வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!

#### நேற்று

கடிகாரம் தலைகீழாய் ஓடும்  - இவன்
வரலாறு எதுவென்று தேடும்!
அடிவானில் பணியாது போகும் - இவன்
கடிவாளம் அணியாத மேகம்!

பல நிலவொளிகளில்
தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில்
கனவுகள் இல்லை ஏதும்.

காணாமலே
போனானடா!
ஏனென்று கேட்காதே போடா !

#### இன்று

பார்வை ஒன்றில் காதல் கொண்டா,
எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்?
பேரே இல்லா பூவைக் கண்டா,
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்?

என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ?

நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ?

ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில்
ஏனிந்தக் காதல்?

#### நாளை

நாளை என் காலைக்
கீற்றே நீ தானே!
கையில் தேநீரும் நீ தானடி!

வாசல் பூவோடு
பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீ தானடி!

கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?

கண் மூடிடும்
அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!

20 comments:

  1. இதில் அணைத்து பாடல்களையும் கேட்டேன்.. ரொம்ப நல்லா இருக்கு, தங்களின் பாடல்கள் எப்பவுமே superb

    ReplyDelete
  2. கன்னம் சுருங்கிட நீயும்
    மீசை நரைத்திட நானும்
    it is imagination for all humen's future one. You showed it using amazing words thanks.

    ReplyDelete
  3. கவர்ந்த வரிகள்

    என் தோற்றத்தில் மாற்றம்
    காற்றெல்லாம் வாசம்
    தானாக உண்டானதேனோ?

    ReplyDelete
  4. கன்னம் சுருங்கிட நீயும்,
    மீசை நரைத்திட நானும்,
    வாழ்வின் கரைகளைக் காணும்
    காலம் அருகினில் தானோ? awesome

    ReplyDelete
  5. கன்னம் சுருங்கிட நீயும்,
    மீசை நரைத்திட நானும்,
    வாழ்வின் கரைகளைக் காணும்
    காலம் அருகினில் தானோ? awesome

    ReplyDelete
  6. Karky அவர்களின் பாடல் வரிகள் அனைத்தும் அற்புதம்..
    நுண்பூகம்பம் வார்த்தை, புதுமை + இனிமையாக இருக்கிறது....!
    புத்துணர்ச்சிகளை பாடல் வரிகளில் மிளிரச் செய்யும் புதுமைக் கவிஞருக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  7. Karky அவர்களின் பாடல் வரிகள் அனைத்தும் அற்புதம்..
    நுண்பூகம்பம் வார்த்தை, புதுமை + இனிமையாக இருக்கிறது....!
    புத்துணர்ச்சிகளை பாடல் வரிகளில் மிளிரச் செய்யும் புதுமைக் கவிஞருக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  8. Lyric engineering brings freshness to ur lyrics n songs :):) very soon addicted to vaya moodi song :):)and ofcourse mayavi too...Very very happy to see u upcoming with successful endeavours :):)பிடிச்ச வார்த்தைகள் சொல்லிட்டே போகலாம்..Congrats Karki Sir..
    -Baveethra

    ReplyDelete
  9. காலத்தை வென்ற காதலின் பெருமை
    சொல்லிச் செல்லும் வரிகள் யாவும்
    அருமை அருமை அருமை
    மனம் கவர்ந்த கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. இதுவரை இந்த பாடலை 40 முறை கேட்டு விட்டேன். again going to listen.

    thanks to karky.

    ReplyDelete
  11. நாளை பகுதியில் உள்ள அணைத்து வரிகளுமே அருமை
    வாழ்த்துக்கள்

    பாடல் கேட்கா விட்டாலும் வரிகள் மனதில் ஓடும் அளவிருக்கு அருமையாய் இருக்கிறது

    ReplyDelete
  12. போதும் இன்னும் காதல் அதிகமாகின்றது அவள் மீது இந்த பாடல் கேட்டால்!!!!!!!

    ReplyDelete
  13. music n voice gave soul to your lovely words!!!pleasing to hear..

    ReplyDelete
  14. என்னை மிகவும் கவர்ந்த வரிகள்...

    "கண் மூடிடும்
    அவ்வேளையும்
    உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!"

    ReplyDelete