Saturday, November 17, 2012
Wednesday, November 07, 2012
[lyric] எனை எனை தீண்டும்
Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
எனை எனை தீ ண்டும்
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : ஹரிசரண், மஹதி
________________________________________
எனை எனை தீண்டும் தனிமையும் நீயா? அருகிலே கேட்கும் அமைதியும் நீயா? விழிகளை நான் மூட கனவிலே நீயா? திறந்ததும் நீ இல்லா வெறுமையும் நீயா? ஏன் எனை என் மனம் கேட்காதது ஏன்? தருக்கங்களை பார்க்காதது ஏன்? உருக்கும் ஒரு காதல் உணர்ந்தேன்! #
அருகினில் குதிக்கிற அருவியிலே - தலை
குளித்ததும் உலர்த்திடும் சிறகினிலே
சிலிர்த்திடும் சருகுகள் மொழியினில் கேட்பவன் நீ
திரிமுனை எரிந்திடும் அழகினிலே - அதில்
முதல் முறை நெகிழ்ந்திடும் மெழுகினிலே
விழுந்திடும் இளகிய அழுகையில் காண்பவன் நீ
என் மார்பில் மோதும் - ஒரு மென் மேகம் ஆனாய் கண் மூடி நின்றேன் - நீ எங்கோடிப் போனாய்?
ஏன் எனை என் மனம் கேட்காதது ஏன்?
தருக்கங்களை பார்க்காதது ஏன்?
உருக்கும் ஒரு காதல் உணர்ந்தேன்!
#
ஓடையின் தெள்ளிய நீர்த்துளி நீ - ஒரு
பூவினின்றள்ளிய தேன் துளி நீ
நாவினில் தமிழென நாளும்
இனிப்பவன் நீ
இமைகளில் மியிலிறகானவன் நீ - என்
இதழினில் விழுகின்ற பனித்துளி நீ
இதயத்தை வருடிடும் உணர்வுகள்
யாவிலும் நீ
என் தேகம் பாயும் - ஒரு உற்சாகம் நீயா? சந்தேகம் இன்றி - என் கண்ணீரும் நீயா?
ஏன் எனை என் மனம் கேட்காதது ஏன்?
தருக்கங்களை பார்க்காதது ஏன்?
உருக்கும் ஒரு காதல் உணர்ந்தேன்!
_________________________________________ |
[lyric] விட்டு விட்டுத் தூவும்
Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
விட்டு விட்டு
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : ராகுல் நம்பியார், பார்கவி
_________________________________________
♀
விட்டு விட்டுத் தூவும்
வெட்கங்கெட்ட வானம்
கிட்டத் தட்ட என் நெஞ்சமோ?
முட்ட வந்த பூவின்
முட்கள் குத்தும் என்றே
வட்டமிட்ட வண்டஞ்சுமோ?
சொல்லாமல் மோதும்
சில்லென்ற காற்றைப் போல நீயும் வந்தாய்
நில் என்ற போதும்
நில்லாமல் ஆடைக்குள்ளே நீ புகுந்தாய்
கல்லொன்று வீசி
உள்ளத்தின் ஆழம் என்ன தேடுகின்றாய்
தெள்ளோடை என்னை
உள்ளங்கையோடு அள்ளி ஓடுகின்றாய்
♂
மொத்த மொத்த நெஞ்சை
சத்தமிட்டுச் சொன்னால்
செத்து கித்துப் போவேனடி
குத்தும் என்று இல்லை
தித்திக்கின்ற தேனில்
புத்தி கெட்டுப் போவேனடி
நில்லாமல் பேசும்
நீரோடை போலே என்னுள் பாய்கின்றாய்
புல்லோடு வீழும்
பூவாகி எந்தன் தோளில் சாய்கின்றாய்
பொல்லாத போதை
என்றாகி என்னுள் ஏறி ஆடுகின்றாய்
செல்லாத பாதை
ஒன்றோடு என்னைக் கூட்டி ஓடுகின்றாய்
________________________________________
[lyric] மேகத்திலே மேலாடை
Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
மேகத்திலே மேலாடை
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : ஷ்ரேயா கோஷல்
___________________________________
மேகத்திலே மேலாடை
காலை நிலா, காலாடை
ஊலலலா உள்ளந்தான்
நானணியும் உள்ளாடை
புல் மீது தூங்குவேன்
அதுவே என் மாளிகை
செல் என்ற பின்புதான்
நகரும் என் நாழிகை
என் பூமி பூமி அது வேறு
என் விழியால் அதை நீ பாரு
பூமி பூமி அது வேறு
என் விழியால் அதை நீ பாரு
பூ ஒன்று திறக்கும் போது
இமைதட்டிச் சிரிப்பேனே
ஈ மீது பூ உதிர்ந்தாலோ
இரண்டுக்கும் அழுவேனே
தேய்பிறை அதன் சோகம் கண்டால்
தேவதை அதில் ஊஞ்சல் செய்வேன்
தேவைகள் ஏதும் இல்லை என்றால்
தெய்வமே இனி நான் தானே
யாரும் இல்லாத போதில்
சத்தமில்லாமல் காதில்
எந்தன் பேர் சொல்லி காற்றும் வீசும்
பூமி பூமி இது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு
பூமி பூமி அது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு
வானோடு மழை வரக் கூடும்
மின்னல் போடும் மின்னஞ்சல்
புயல் ஒன்றின் தொலைநகலாகும்
இன்று வீசும் மென் தென்றல்
தூறலே குறுஞ்செய்தி ஆகும்
வானவில் பின்னணியில் தோன்றும்
அழைக்கிறாய் ஒரு இரகசியம் சொல்ல
அருவிகள் அழைப்பொலியாகும்
பேச காசேதும் இல்லை
ஊரும் ஏன் பேச வில்லை
ஊடகம் எங்கும் விளம்பரம் உனக்கில்லை
பூமி பூமி இது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு
பூமி பூமி அது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு
_____________________________________
[lyric] Adidas
Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
அடிடாஸ்
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : மனோ
________________________________________
அடிடாஸ் மாட்டிக்கோ
அதிரடி காட்டிக்கோ
அடிக்கடி ஆடிப் பாத்துக்கோ
ramp walking பொண்ணெல்லாம்
நேரில் பாக்குறோம்
அவனுக்கு thanks போட்டுக்கோ
fashion tvல பாத்ததெல்லாம்
வாசம் பாக்கத்தான் விட்டுட்டானே
ஏதும் கேக்காம எல்லாந்தந்து
போதுஞ் சொல்லத்தான் வெச்சுட்டானே
ஹே தல தல சுத்துதே
மூச்சே முட்டுதே
சொர்கங் காட்டிப்புட்டானே
ஹே அட மழ கொட்டுதே
மின்னல் வெட்டுதே
மேகம் ஆட்டிவிட்டானே
அஞ்சாறு வயசோடு போட்டதெல்லாம்
அஞ்சாம பதினெட்டில் போட்டு வந்தா(ள்)
கொஞ்சூண்டு துணியோடு நீயும் நின்னா
யாரு கிட்ட நியாயம் கேப்பேன் கந்தா?
இந்த orange பேண்டோட உன்னப் பாத்தா
fantaந்னு சொல்லுவா எங்க ஆத்தா
தொட்டாலே உஸ்ஸுன்னு சத்தம் போட்டா
நீதானே என் கையில் cocacola
ஹே தல தல சுத்துதே
மூச்சே முட்டுதே
சொர்கங் காட்டிப்புட்டானே
ஹே அட மழ கொட்டுதே
மின்னல் வெட்டுதே
மேகம் ஆட்டிவிட்டானே
axe scent போடாமலே நம்மச் சுத்தி
எக்கச்சக்க பொண்ணு எல்லாம் வந்தாச்சுடா
six seven pack எல்லாம் இல்லாமலும்
chicks எல்லாம் நம்ம மேல சாயும்
அட நம் நேரம் உச்சத்தில் ஏத்திவெச்சான்
எங்கெங்கோ மச்சத்த அச்சடிச்சான்
high heels மாட்டிக்கும் பூவ எல்லாம்
ஐய்யோ என் தோட்டத்தில் நட்டு வெச்சான்
ஹே தல தல சுத்துதே
மூச்சே முட்டுதே
சொர்கங் காட்டிப்புட்டானே
ஹே அட மழ கொட்டுதே
மின்னல் வெட்டுதே
மேகம் ஆட்டிவிட்டானே
____________________________
[lyric] தெய்வத்தப் போல
Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
தெய்வத்தப் போல
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : ஹேமசந்திரன்
___________________________________________
தெய்வத்தப் போல
அம்மான்னு சொன்னா
இல்லாம போனா....
குப்பையின்னு என்ன
கொட்டீட்டுப் போனா
சொல்லாம போனா....
உனக்கோ... நான் அழுவேன்
எனக்கு... யார் இருக்கா?
ஒரு நாள் தூங்க
மடிய கேட்டேன் தாம்மா...
பூச்சிக்குக் கூட
அம்மா இருக்கே
சாப்பாடு ஊட்ட
வேறொண்ணும் வேணா
நீ மட்டும் போதும்
பாசத்தக் காட்ட
தொலைவா... நீ போயிட்ட
வரவே... நீ மாட்ட
தூக்கித் தழுவ
ஒரு நாளாச்சும் வாம்மா...
Thursday, October 11, 2012
[lyric] Antarctica
V Creations
துப்பாக்கி
Antarctica
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : AR முருகதாஸ்
குரல் : விஜய் பிரகாஷ், க்ரிஷ்
_________________________________
அண்டார்டிக்கா
வெண் பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்?
நீ பெங்குவினா?
பெண் டால்ஃபினா?
ஏன் குழம்புது கொஞ்சம்?
ஹே நிஷா..... நிஷா நிஷா
ஹே நிஷா.... நிஷா நிஷா
அடி பெண்ணே என்
மனது எங்கே
ரேடார் விளக்குமா?
அடி என் காதல்
ஆழம் என்ன?
சோனார் அளக்குமா?
_______
அழகளந்திடும் கருவிகள்
செயலிழந்திடும் அவளிடம்
அணியிலக்கணம் அசைவதை பார்த்தேன்!
அவள் புருவத்துக் குவியலில்
மலைச் சரிவுகள் தோற்பதால்
விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்!
அவள் மேலே வெயில் வீழ்ந்தால்
நிலவொளியாய் மாறிப் போகும்
அவள் அசைந்தால்,
அந்த அசைவிலும் இசை பிறக்கும்!
_______
தடதடவென ராணுவம்
புகுந்திடும் ஒரு சாலையாய்
அதிர்வுடன் நுழைந்தாயடி, என்னில்!
இருவிழிகளின் குழலிலே
படபடவென வெடிக்கிறாய்
இருதயம் துளைத்தாயடி, கண்ணில்!
உனைப் போலே ஒரு பெண்ணை
காண்பேனா என்றே வாழ்ந்தேன்
நீ கிடைத்தால்,
என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்!
_______________________________________
[lyric] Google Google
V Creations
♀
துப்பாக்கி
Google Google
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : AR முருகதாஸ்
குரல் : விஜய், ஆண்ட்ரியா
_______________________________
♀
Google Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல -
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல
|
||||||
Yahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவனப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல |
||||||
நான் dating கேட்டா watchஅ பாத்து ok சொன்னானே!
shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே!
movie கேட்டேன் Youtube போட்டுப் popcorn தந்தானே!
|
||||||
பாவமா நிக்குறான்
ஊரையே விக்குறான்!
|
||||||
Meet my meet my boyfriend
My smart ‘nd sexy boyfriend
|
||||||
Meet my meet my boyfriend
My smart ‘nd sexy boyfriend
|
Thursday, September 20, 2012
[lyric] ஒன்றாக முளைத்தோம்
Sax Pictures
சாருலதா
ஒன்றாக முளைத்தோம்
இசை : சுந்தர் சி பாபு
இயக்கம் : பொன்குமரன்
குரல் : மஹதி
_________________________________
ரெண்டாக சிரித்தோம்
ஒற்றைக் காம்பில் ரெட்டைப் பூவானோம்
இணையே பிரியா - துளி தனிமை அறியா...
நம் போலே யாரும் இல்லை இவ்வுலகில்!
தாயன்பில் என்றும் பேதமில்லை
ஆளுக்கோர் தோள் தந்து தூங்கச்சொல்வாள்!
தாயைப் போல் தெய்வம் ஏதுமில்லை
ஆளுக்கோர் கண் கொண்டு காவல் நிற்பாள்!
பாடத்தில் காணாத வாழ்க்கையை
தாயே சொல்லித்தருவாள்!
ஊருக்குள் காணாத அன்பையும்
தாயே அள்ளித்தருவாள்!
நான் என்ற சொல்லே தேவையில்லை!
கண்ணாடி பார்த்திடும் வேலை இல்லை!
நாற்காலிப் பூக்கள் எங்களுக்கு
நெஞ்சுக்குள் இரகசியம் வாய்ப்பேயில்லை!
தோளுக்குத் தோள் நின்று ஆடுவோம்
சோகம் அறிந்ததில்லை!
பாதைகள் ரெண்டாகும் போதிலும்
நாங்கள் பிரிந்ததில்லை!
______________________________________
[lyric] வாஞ்சை மிகுந்திட
Sax Pictures
சாருலதா
வாஞ்சை மிகுந்திட
இசை : சுந்தர் சி பாபு
இயக்கம் : பொன்குமரன்
குரல் : ரிடா
_______________________________
♀
வாஞ்சை மிகுந்திட
ஆஞ்சை இடுகிறேன்
கொஞ்சம் பணிந்திடு - இனிவரும்
ஏல்வை முழுவதும்
சால்வை இவளெனத்
தோளில் அணிந்திடு
உனக்கென... உலகையே
உதறினேன் பார்த்திடு....
______
♀
மாலை ரெண்டு மாற்றவில்லை
தாலி ஒன்றும் ஏற்றவில்லை
நீயும் நானும் ஒன்றாய் வாழ்கின்றோம்
♂
ஊரைப் பார்க்கத் தோன்றவில்லை
நாளை மீதும் நாட்டம் இல்லை
அன்றில் போலே ஒன்றாய் வாழ்கின்றோம்
♀
ரேகைகள் ரெண்டில் ரெக்கைகள் நெய்தோம்
பறக்க வானேறினோம்
பூமியைச் சுற்றி முடித்ததாலே
புதிய கோள் தேடி நீயும் நானும் புகுந்திட... (வாஞ்சை மிகுந்திட)
______
பாதை எங்கே போகுமென்றே
சாலைப் பூக்கள் கேட்பதில்லை
பூக்கள் போலே வாழ்க்கை கொள்வோமா?
♂
பூவில் தோன்றும் வாசம் என்றும்
பாதை பார்த்துச் செல்வதில்லை
வாசம் போலே காற்றில் செல்வோமா?
♀
உரிமை என்றே உடைமை என்றே
எனக்கு நீ தோன்றினாய்
இளமைக் காட்டின் செழுமை யாவும்
முழுமையாய் உந்தன் தலைமையில் திகழ்ந்திட... (வாஞ்சை மிகுந்திட)
______
[lyric] கடவுள் துகள்
Sax Pictures
சாருலதா
கடவுள் துகள்
இசை : சுந்தர் சி பாபு
இயக்கம் : பொன்குமரன்
குரல் : சுச்சித் சுரேசன்
_________________________________
♀
எடையில்லா கடவுள் துகளைப் போலே
மிதக்கின்றேன் வெள்ளை வண்ண வானத்திலே
தடையில்லா வழியில் பாயும் காற்றாய்
மனதுள்ளே கொள்ளை இன்பம் பாய்கிறதே
இனியேதும் அச்சங்கள் இல்லை
இனியேதும் துன்பங்கள் இங்கில்லை
முடிவில்லா காதல் மட்டும் தான்....
_____
♀
புன்னகைகள் நான் தேடுகிறேன்
உள்ளுக்குள்ளே அவை வைத்துக்கொண்டே
சொர்கங்களை நான் தேடுகிறேன்
என்னருகே உன்னை வைத்துக்கொண்டே
♂
ஒட்டிக்கொண்டே பிறந்திடும் இரு பிள்ளைகளாய்
இன்பத்துடன் துன்பம் பிறக்கும்!
காதல் கொண்டே
இந்த காலம் என்ற கத்தியால்
துன்பத்தை வெட்டி எறிந்தோம்!
_____
♂
தெய்வங்களை நான் நம்புவதே
கண்ணில் உன்னை காணச் செய்ததற்கே
வேதியலை நான் நம்புவதே
உன்னை என்னை ஒன்று சேர்த்ததற்கே
♀
முத்தந்தின்னி பறவை ஒன்றின்று என்னைச் சுற்றி
கொத்துதிங்கே என்ன செய்வேனோ?
வெட்கத்தினை
கேட்டு நச்சரித்து நிற்குதே
யாரோடு நியாயம் கேட்பேனோ?
_____
Monday, August 20, 2012
[lyric] ரெக்கை முளைத்தேன்!
Company Production
சுந்தரபாண்டியன்
பாடல் : ரெக்கை முளைத்தேன்!
இசை : என் ஆர் ரகுநந்தன்
இயக்கம் : பிரபாகரன்
குரல்கள் : GV பிரகாஷ், ஷ்ரேயா கோஷல்
_____________________________
♂
ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்!
♀
தப்பித் தொலைந்தே
போகத் துடித்தேன்
ஒருவரும் இல்லாத
தேசம் தேடிப் பிடித்தேன்!
எனக்கென பதுக்கிய கனவுகள்
முதன்முறை தரைவிட்டுப் பறக்குது உன்னாலே!
உனக்கென செதுக்கிய இதயமும்
முதன்முறை உயிர் வந்து துடிக்குது உன்னாலே!
எத்தனை வேகம் சென்றாலும்
நிற்பதாய் தோன்றும் உன்னாலே!
இத்தனை பக்கம் வந்தாலும்
வெட்கமே இல்லை உன்னாலே!
கண்களில் மின்னிடும் காதலை... நான்
அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை
நீயே சொன்னாய் மறுமுறை
_________
பகலிலே சுவரை வெறித்தேன்
தெருவிலே தனியே சிரித்தேன்
கழன்றதாய் பேரும் எடுத்தேன் எல்லாம் உன்னாலே!
இரவிலே தூக்கம் தொலைந்தேன்
படுக்கையை சுற்றி அலைந்தேன்
வகுப்பிலே தூங்கி வழிந்தேன் எல்லாம் உன்னாலே!
கட்டம் போட்ட ஒன்றா? - இல்லை
கோடு போட்ட ஒன்றா?
எந்தச் சட்டைப் போட? - என
முட்டிக்கொண்டேன் உன்னாலே!
பச்சை வண்ணப் பொட்டா - இல்லை
மஞ்சள் வண்ணப் பொட்டா
நெற்றி மேலே ரெண்டும் - நான்
ஒட்டிக்கொண்டேன் உன்னாலே!
_________
காற்றிலே முத்தம் வேண்டாம்
வார்த்தையில் அர்த்தம் வேண்டாம்
சுற்றிலும் சத்தம் போடும் ஏதும் வேண்டாமே!
கவிதைகள் கிறுக்கிட வேண்டாம்
கசக்கியும் எறிந்திட வேண்டாம்
எறிந்ததை மீண்டும் பிரித்து சிரித்திட வேண்டாமே!
பாறை மேலே ஏறி - நம்
பேரைத் தீட்ட வேண்டாம்
எல்லை கொஞ்சம் மீற - இனி
அச்சம் ஏதும் வேண்டாமே!
சாலை ஓரத் தேநீர் - அது
கோப்பை ரெண்டில் வேண்டாம்
பேருந்தேரும் போதும் - இனி
டிக்கெட் ரெண்டு வேண்டாமே!
♀
ரெக்கை முளைத்தே
ரெக்கை முளைத்தே
எனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தாய்.
தப்பித் தொலைந்தே
போகத் துடித்தேன்
ஒருவரும் இல்லாத
தேசம் தேடிப் பிடித்தாய்.
இனி இனி - தனித்தனி உலகினில்
இருவரும் உலவிடும் நிலையே வேண்டாமே
இனி இனி - மனதினில் தேக்கிட
காதல் உண்டாக்கிடும் வலியே வேண்டாமே
♀
ஓரக் கண் பார்வை வேண்டாமே
ஓரடி தூரம் வேண்டாமே
மாறிடும் நேரம் வேண்டாமே
ஊரிலே யாரும் வேண்டாமே
கண்களில் மின்னிடும் காதலை... நான்
அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை
நீயே சொன்னாய் மறுமுறை
________________
Thursday, August 09, 2012
[lyric] கால் முளைத்த பூவே!
AGS Entertainment
மாற்றான்
பாடல் : கால் முளைத்த பூவே!
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : கே வி ஆனந்த்
குரல்கள் : ஜாவேத் அலி, மஹாலக்ஷ்மி ஐயர்
_________________________________________
♂
கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா!
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா!
கேமமில் பூவின் வாசம் அதை - உன்
இதழ்களில் கண்டேனே!
சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்
விழிகளின் விளிம்பினில் கண்டேன்!
♀♂
அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.
______________
♂
நிலவுகள் தலைகள் குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே!
♀
தலைகள் குனிந்ததோ?
மமதை அழிந்ததோ?
கடமை முடிந்ததோ?
பிறந்த நொடியிலே!
♂
ஹே பெண்ணே...உன் வளைவுகளில்
தொலைவதுபோலே உணருகிறேன்
இடையினிலே திணறுகிறேன்
கனவிதுதானா… வினவுகிறேன்.
♀♂
அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.
______________
♀
இரவெலாம் நிலவு எரிகையில்
திரிகளாய் விரல்கள் திரியுதே!
அருகிலே நெருங்கி வருகையில்
இளகியே ஒழுக்கம் உருகுதே!
♂
நிலவு எரிகையில்
விரல்கள் திரியுதோ?
நெருங்கி வருகையில்
ஒழுக்கம் உருகுதோ?
♀
எனை ஏனோ... உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
இடைவெளியை சுருக்குகிறாய்
இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்!
♀♂
அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் ம்ம்
இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் ம்ம்
உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்
எரியும் வெறியை தெறித்தாய்.
______________
